யஞ்ஞதானத3ப1:க1ர்ம ந த்1யாஜ்யம் கா1ர்யமேவ த1த்1 |
யஞ்ஞோ தா1னம் த1ப1ஶ்சை1வ பா1வனாநி மனீஷிணாம் ||5||
யஞ்ஞ-—தியாகம்; தான—தொண்டு; தபஹ---:தவம்; கர்ம--—செயல்கள்; ந—ஒருபோதும் இல்லை; த்யாஜ்யம்—கைவிடப்பட வேண்டும்;கார்யம் ஏவ—நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்;தத்--—அது; யஞ்ஞஹ-—தியாகம்; தானம்--—அறம்; தபஹ----:தவம்; ச--—மற்றும்; ஏவ--—உண்மையில்; பாவனானி—--தூய்மைப்படுத்துதல்; மனீஷிணாம்—--ஞானிகளுக்கு.
BG 18.5: தியாகம், தானம் மற்றும் தவம் ஆகியவற்றின் அடிப்படையிலான செயல்களை ஒருபோதும் கைவிடக்கூடாது; அவை நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும். உண்மையில், தியாகம், தானம் மற்றும் தவச் செயல்கள் ஞானமுள்ளவர்களையும் தூய்மைப்படுத்துகின்றன.
யஞ்ஞதானத3ப1:க1ர்ம ந த்1யாஜ்யம் கா1ர்யமேவ த1த்1 |
யஞ்ஞோ தா1னம் த1ப1ஶ்சை1வ பா1வனாநி மனீஷிணாம் ||5||
தியாகம், தானம் மற்றும் தவம் ஆகியவற்றின் அடிப்படையிலான செயல்களை ஒருபோதும் கைவிடக்கூடாது; அவை நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும். உண்மையில், தியாகம், தானம் மற்றும் தவச் செயல்கள் ஞானமுள்ளவர்களையும் …
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
நம்மை உயர்த்தும் மற்றும் மனித குலத்திற்கு நன்மை பயக்கும் செயல்களை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் தனது தீர்ப்பை இங்கே கூறுகிறார். இத்தகைய செயல்கள், சரியான விழிப்புணர்வில் செய்யப்பட்டால், நம்மைப்பிணைப்பதில்லை; மாறாக, அவை ஆன்மீக ரீதியில் வளர உதவுகின்றன. ஒரு கம்பளிப்பூச்சியை கவனியுங்கள். அது தன் பரிணாம வளர்ச்சிக்காக ஒரு கூட்டை நெய்து அந்த கூட்டில் தன்னை அடைத்துக் கொள்கிறது. அது ஒரு பட்டாம்பூச்சியாக மாறியதும், அது கூட்டை உடைத்து வானத்தில் பறக்கிறது. உலகில் நமது நிலையும் இதைப் போன்றது. அசிங்கமான கம்பளிப்பூச்சியைப் போல, நாம் தற்போது உலகத்துடன் இணைந்திருக்கிறோம், மற்றும் உன்னத குணங்களை இழக்கிறோம். நமது சுய ஆயத்தம் மற்றும் கல்வியின் ஒரு பகுதியாக, நாம் விரும்பும் உள் மாற்றத்தைக் கொண்டுவரும் செயல்களைச் செய்ய வேண்டும். யக்3ஞம்), தா3னம் (அறம்), த1ப (தவம்) ஆகியவை நமது ஆன்மீக மற்றும் படிப்படியாக விரிவடைந்து வளர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது. அவை நம் அசுத்தங்களை உருக்கி, உள்ளிருந்து நம்மை அழகுபடுத்துகின்றன. மேலும், பொருள்- வாழ்க்கையின் தளைகளை உடைக்க உதவுகின்றன. எனவே, அத்தகைய மங்களகரமான செயல்களை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் அறிவுறுத்துகிறார். அவர் இப்போது, அவை எந்த முறையான அணுகுமுறையுடன் செய்யப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தி தனது அறிக்கையை தகுதி நிறைவுயுடையதாக்குகிறார்.